சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு!

சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு!

வேடர் குலத்தில் பிறந்து தீயச் செயல்களை புரிந்து, காட்டில் வருவோரைக் கொடுமைப்படுத்தி கொண்டிருந்தான் “விப்பரதன்”. ஒரு நாள் அவ்வழியாக வந்த முனிவரை வெட்டி வீழ்த்த எண்ணினான். முனிவரோ தன் சக்தியால் அவனை செயல் இழக்க செய்தார்.

 
வேடனோ முனிவரிடம் வேண்டி உயிர்ப்பிச்சை கேட்டான். அவனை மன்னித்த முனிவர், உன் பாவம் தொலையட்டும் என்று கூறி “கணேச மந்திரத்தையும், விரதத்தையும் செய்து வாழ்வை நல்லபடி அமைத்துக் கொள்” என்று கூறி ஆசீர்வதித்தார். விப்பரதன் மந்திரத்தையும் விரதத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்தான். அவனே பின்னாளில் புரூகண்டி என்ற முனிவர் ஆனார். புரூகண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாம் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ்வே சங்கடஹர சதுர்த்தி தோன்றியதாக வரலாறு கூறுகின்றது. நம் சங்கடங்களைக் களைவதற்காகவே சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நாம் மேற்கொள்கின்றோம்.
 
சங்கடஹர சதுர்த்தி விரதம்
 
மாசி மாதம் தேய்பிறையும். செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி, ஓராண்டு விதிப்படி விரதம் மேற்கொண்டால் நமக்கு ஏற்பட்டிருக்கும் எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுவோம். செல்வம், செல்வாக்கு, கல்வி முதலியவற்றில் சிறப்புடன் விளங்கலாம். இவ்விரதத்தை தொடங்கும் நாளில் சூரிய உதயத்திற்கு ஐந்து நாழிகைக்கு முன்னரே எழுந்து புனித நீராடி சங்கல்பம் செய்து விநாயகப் பெருமானைத் தியானம் செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருப்பதே மேலாகும்.
 
விநாயகப் புராணத்தை பாராயணம் செய்து, சதுர்த்தி விரதம் போன்று இதற்கும் விநாயகப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம். மாலை சந்திரனை வழிபட்டு கோயில் சென்று அபிஷேகம் பார்த்து விநாயகர் கவசம் படித்து விரதத்தை மேற்கொள்ளலாம்.
 
-S.L.S.பழனியப்பன்